25.7 C
Jaffna
January 17, 2025
Pagetamil
இலங்கை

கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 91 பேர் கைது!

கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்ற 91 பேர் மாரவில மற்றும் சிலாபத்தில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாரவில மற்றும் சிலாபம் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது நேற்று முன்தினமும், நேற்றும் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மாரவில ஓய்வு விடுதியில் இருந்து 13 ஆண்கள், ஒன்பது வயது சிறுவன் மற்றும் கடத்தல்காரர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சிலாபம் கடற்பரப்பில் பல நாள் மீன்பிடி இழுவை படகு ஒன்றை கடற்படையினர் கண்காணித்து 58 ஆண்கள், 5 பெண்கள் மற்றும் 7 சிறுவர்கள் மற்றும் ஆறு கடத்தல்காரர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, புத்தளம், கல்பிட்டி, சிலாபம், மாரவில மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

குறித்த குழுவினர் மேலதிக நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1

இதையும் படியுங்கள்

ரயில் சேவைகள் ரத்து: பயணிகள் கடும் சிரமத்தில்

east tamil

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

east tamil

துமிந்த சில்வா, ஹிரு பற்றிய தகவல்களை வெளியிட தடை

Pagetamil

பட்டம் விட்ட சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

பொங்குதமிழ் பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு எழுச்சிநாள் நிகழ்வுகள்

Pagetamil

Leave a Comment