யாழ் நகர தங்கும் விடுதிகளில் திடீர் பாய்ச்சல்: அறைகள் நிறைய ஜோடிகள்!

Date:

யாழ் நகரப்பகுதிகளிலுள்ள தங்கும் விடுதிகளில் இன்று நடத்தப்பட்ட அதிரடி பரிசோதனையில், பல இளம் ஜோடிகள் சிக்கினார்கள். அவர்கள் அறிவுரை கூறி, அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட தங்கும் விடுதிகளில் இன்று மாநகரசபையினர் திடீர் பரிசோதனை மேற்கொண்டனர்.

7 தங்கும் விடுதிகள் இன்று சோதனையிடப்பட்டன. அதில் ஒரு விடுதி பதிவு செய்யப்பட்டாதது.

இன்று பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பெரும்பாலான விடுதிகளில் இளைஞர்களும், யுவதிகளும் ஜோடியாக அறைகளில் தங்கியிருந்தது தெரிய வந்தது. அவர்கள் மீது சட்டநடவடிக்கையெடுக்க முடியாத போதும், அவர்கள் அறிவுரை கூறி அனுப்பி வைக்கப்பட்டனர்.

மாநகர எல்லைக்குள் உள்ள அனைத்து தங்குமிடங்களையும் கிரமமாக ஆய்வு செய்யவுள்ளதாகவும், அங்கு சிக்கும் ஜோடிகளின் பெற்றோரை அழைத்து அவர்களை ஒப்படைக்கவுள்ளதாகவும் மாநகரசபை வட்டாரங்கள் தெரிவித்தன.

spot_imgspot_img

More like this
Related

சவுதி அராம்கோ ஹெலிகாப்டர் விபத்து: 14 உயிர்களை காவுகொண்ட பேரதிர்ச்சி

சவுதி அரேபியாவில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக...

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும் யோசனையை அரசு பரிசீலனை

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான...

முதியோர் கொடுப்பனவை மீள வழங்க சிறப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தால் மாதாந்திர முதியோர் கொடுப்பனவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்