அக்குரஸ்ஸ மாரம்ப பிரதேசத்தில் இளம் தம்பதியொருவர் தமது திருமண பயணத்திற்காக இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணித்த காட்சி வைரலாகியுள்ளது.
தற்போதைய எரிபொருள் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக புதுமணத் தம்பதிகள் தெரிவித்துள்ளனர்.
திருமண வைபவம் நாட்டுக்கு சுமை ஏற்படாத வகையில் மிகவும் அடக்கமாகவும் கண்ணியமாகவும் திட்டமிடப்பட்டதாக மாரம்ப இடிகடுதெனிய பிரதேசத்தை சேர்ந்த தமித் பிரியதர்ஷன மணல தெரிவித்தார்.
அவர் தனது மனைவி இசங்கா மதுஷானியை மரம்பாவில் உள்ள விழா மண்டபத்தில் திருமணம் செய்து கொண்டார்.




