ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பை, பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி உடனடியாக மேற்கொள்வதா என்பது குறித்த வாக்கெடுப்பு தோல்வியடைந்தது.
நிலையியற் கட்டளையின்படி, பராளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு மீதான வாக்கெடுப்பை உடனடியாக நடத்த முடியாது. சில நாள் அவதாகசத்தின் பின்னரே வாக்கெடுப்பை நடத்தலாம்.
எனினும், ஜனாதிபதி மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பை நிலையியல் கட்டளைகளை மீறி நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
நிலையியற் கட்டளையின் பிரகாரம் அவ்வாறு செய்யமுடியாது என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
அப்படியாயின், வாக்கெடுப்புக்குச் செல்வோமென தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம் இலத்திரனியல் முறைமையின் கீழ் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வாக்கெடுப்பில், பிரேரணைக்கு ஆதரவாக 68 வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் கிடைத்தன. அதனடிப்படையில், பிரேரணை 51 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
இதனால் நிலையியற் கட்டளைப்படி உடனடியாக வாக்கெடுப்பிற்கு வராது.அடுத்த வாரமளவில் வாக்கெடுக்கிற்கு விபப்படும்.




