பொரலஸ்கமுவ பெபிலியான பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் ‘உண்டியல்’ பணபரிமாற்றத்தில் ஈடுபட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து , 50,000 யூரோ நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டன.
பணத்தின் பெறுமதி 18 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர்
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது
பணமோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புஞ்சி பொரளை பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடையவர்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கிருலப்பனை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.




