அதிபருடன் கோபம்: அதிபர் அலுவலகம், கணினி அறைக்கு தீ வைத்த 12, 7 வயது மாணவர்கள் கைது!

Date:

பாணந்துறை கெசல்வத்தையில் உள்ள பாடசாலை ஒன்றில் அதிபருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து பாடசாலை அதிபரின் அலுவலகம் மற்றும் கணினி அறைக்கு இரண்டு மாணவர்கள் தீ வைத்துள்ளது பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பாணந்துறை கெசல்வத்த ஸ்ரீ ஜினா தர்மதான வித்தியாலயத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் பாணந்துறை வடக்கு பொலிஸார் நடத்திய விசாரணையில் இரண்டு மாணவர்கள் தீ வைத்தது தெரிய வந்தது.

இந்த தீ விபத்தில் அதிபர் அலுவலகம் மற்றும் கணினி அறை ஆகியவை சேதமடைந்தன.

சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட விசாரணையில், அந்த பாடசாலையில் கற்கும் 12 மற்றும் 7 வயதுடைய இரண்டு மாணவர்களே இச்சம்பவத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

சில தவறுகளுக்காக அதிபர் தங்களுக்குத் தண்டனை வழங்கியதால், அதிபருடன் இருந்த கோபத்தினால் தீ வைத்ததாக அவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

இரு மாணவர்களும் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...

சஹ்ரானைக் கண்டதுமில்லை-பேசியதுமில்லை-ரிசாட் பதியுதீன்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தனக்கு...

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்