30.7 C
Jaffna
March 29, 2024
கிழக்கு முக்கியச் செய்திகள்

சாய்ந்தமருது தற்கொலைதாரிகளின் உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டது!

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதலை தொடர்ந்து அம்பாறை சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் டி.என்.ஏ பரிசோதனைக்காக புதன்கிழமை (27) காலை அம்பாறை புத்தங்கல பொது மயானத்தில் தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றது.

மூன்றாவது தடவையாக மேற்கொள்ளப்படவுள்ள இப்பிரேத பரிசோதனையானது அம்பாறை பிரதான மாவட்ட நீதிபதி மற்றும் நீதிவானுமாகிய லுசாகா குமாரி தர்மகீர்த்தி முன்னிலையில் சட்ட வைத்திய அதிகாரிகளான என்.டபிள்யு.யு.தினுகா மதுசானி மற்றும் ருச்சிர நதீர ஆகியோருடன் இரசாயன பகுப்பாய்வாளர் வனிதா பண்டாரநாயக்க தடயவியல் பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பிரசன்னத்துடன் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு பகுப்பாய்விற்கு உட்படுத்தப்படுகின்றது.

இந்நடவடிக்கையானது கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரியின் மனைவி புலஸ்தினி மகேந்திரன் (சாரா ஜெஸ்மின்) என்பவர் தொடர்பான டிஎன்ஏ பரிசோதனைக்காக சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு வருவதான பொலிஸ் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.அத்துடன் சம்பவ இடத்திற்கு அருகில் ஊடக அனுமதி மறுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஈஸ்டர் தொடர் தாக்குதல்களின் பிரதான சந்தேகநபரான சஹரான் ஹசீமின் சகோதரரால் 26.04.2019 இரவு சாய்ந்தமருது பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஈஸ்டர் தொடர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் சாரா ஜஸ்மின் இறந்ததாக இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

சாரா தொடர்பான மர்மங்கள் நீடித்து வரும் நிலையில் அவர் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.சாராவை அடையாளம் காண உடல் உறுப்புகள் டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்கள் என வெளியிடப்பட்ட பெயர்களின் விபரங்கள் பின்வருமாறு

முஹமட் ஹாசீம் முகமட் றில்வான் (முகமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் சகோதரர்)
முகமட் நஸார் பாத்திமா நப்னா (முஹமட் ஹாசீம் முகமட் றில்வானின் மனைவி)
முஹமட் ஹாசீம் முகமட் ஜெய்னி/முகமட் சின்னா மௌலவி (முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் சகோதரர்)
ஆதம்லெப்பை பாத்திமா அப்ரீன் (முஹமட் ஹாசீம் முகமட் ஜெய்னியின் மனைவி)
ஹயாது முஹமட் ஹாசீம் (முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் தந்தை)
அப்துல் சத்தார் சித்தி உம்மா (முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் தாய்)
முகமட் ஹாசீம் ஹிதாயா (முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் சகோதரி)
இப்றாகிம்லெப்பை முஹமட் றிசாட் (முஹமட் ஹாசீம் முகமட் றில்வானின் மைத்துனரும் முகமட் ஹாசீம் ஹிதாயாவின் கணவர்)
அப்துல் ரஹீம் பிரோஸா (சியோன் தேவாலய தற்கொலை குண்டுதாரி ஆசாத்தின் மனைவி)
மகேந்திரன் புலஸ்தினி/சாரா ஜெஸ்மின் (நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலய தற்கொலை குண்டுதாரி முகமட் ஹஸ்தூனின் மனைவி)
அகமதுலெப்பை முகமட் நியாஸ் (தேசிய தௌஹீத் ஜமாத் பிரதான உறுப்பினர்)
முகமட் றில்வான் மீரா (முஹமட் ஹாசீம் முகமட் றில்வானின் மகள்)
முகமட் றில்வான் மருவான் சஹீட் (முஹமட் ஹாசீம் முகமட் றில்வானின் மகன்)
முகமட் ஜெய்னி அமாயா (முஹமட் ஹாசீம் முகமட் ஜெய்னியின் மகள்)
முகமட் இமாம் ஹாசிம் (முஹமட் ஹாசீம் முகமட் ஜெய்னியின் மகன்)
முகமட் சஹ்ரான் வாசீட் (முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் மகன்)

மற்றுமொரு சடலம் இணங்காணப்படவில்லை

இது தவிர இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள்

முகமட் சஹ்ரான் ருசைதா (முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் மகள்)
அப்துல் காதர் பாத்திமா ஹாதியா/சித்தியா (முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் மனைவி)

மேற்குறித்த 17 பேர் உள்ளடங்களாக மரணமாகியயுள்ளனர்.

சாய்ந்தமருது தற்கொலை தாக்குதல் இடம்பெற்று கடந்த 26.04.2022 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதன்போது கொல்லப்பட்டதாக கூறப்படும் 17 பேரின் உடற் பாகங்களையும் குடும்ப உறுப்பினர்களின் மரபணு பரிசோதனை அறிக்கைகளை கொண்டு பகுப்பாய்வு செய்ததில் சந்தேகத்திற்கிடமாக தேடப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்பவரின் மரபணுபரிசோதனை அறிக்கை(னுNயு) பொருந்தவில்லை என தெரிவிக்கப்பட்டதை அடுத்து சாரா என்றழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரனின் மரபணுபரிசோதனை அறிக்கை அறிய மீண்டும் சாரா என்ற புலஸ்தினி தப்பி சென்றுள்ளாரா என சந்தேகம் எழுப்பப்பட்டு சர்ச்சைகள் நாளுக்கு நாள் நீடிக்கின்றன.

கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஏப்ரல் 21 நடைபெற்ற பின்னர் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சாய்ந்தமருது பொலிவேரியன் கிராம பகுதியில் மேற்படி தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்தது.இதன்போது குறித்த பகுதி வீடு ஒன்றில் வாடகைக்கு குடியிருந்த சஹ்ரான் ஹசீமின் தம்பி உட்பட பலரும் கொல்லப்பட்டிருந்தனர்.மேலும் சஹ்ரான் ஹசீமின் மனைவி உட்பட அவரது மகள் உயிருடன் இராணுவத்தினரால் மீட்கப்பட்டிருந்தனர்.

இதனை அடுத்து இச்சம்பவம் தொடர்பில் நீதிமன்றங்களில் தொடர்ச்சியாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.இதன் போது விசாரணையாளர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களளின் மரபணுபரிசோதனை தொடர்பாக பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளதுடன் குறித்த தாக்குதல் சம்பவத்தில் மரணமடைந்ததாக தெரிவிக்கப்படும் சாரா என்றழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்ற பெண்ணின் மரபணு பரிசோதனை மாத்திரம் எந்தவொரு மரபணு பரிசோதனையுடனும் ஒத்துப்போகவில்லை என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-பா.டிலான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை அநீதிக்கு எதிராக 5வது நாளாக போராட்டம்!

Pagetamil

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

மருதமுனை மதரஸாவில் கொடூரம்!

Pagetamil

Leave a Comment