தமிழ் கட்சிகளின் 2வது கலந்துரையாடலும் தீர்மானமின்றி முடிந்தது: ‘சிங்களவர்’ போராட்டத்தில் கலந்துகொள்ளாமலிருப்பது பலரது அபிப்பிராயம்!

Date:

யாழ்ப்பாணத்தில் தமிழ் கட்சிகள், குழுக்களிற்கிடையிலான இரண்டாவது சந்திப்பும் எந்த முடிவுமின்றி முடிவடைந்தது.

யு.எஸ் ஹொட்டலில் நேற்று (24) காலை 9.30 மணிக்கு கூட்டம் ஆரம்பித்தது.

இலங்கை தமிழ் அரசு கட்சி, ரெலோ, புளொட், தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ்,  தமிழ் தேசிய கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி, தமிழ் தேசிய பசுமை இயக்கம், அனந்தி குழு உள்ளிட்ட அரசியல் தரப்புக்களும், வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சில குழுவினரும் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இந்த தரப்புக்கள் ஏற்கனவே ஒருமுறை கூடியிருந்தனர். அப்போதும் தீர்க்கமான எந்த முடிவும் எட்டப்பட்டிருக்கவில்லை.

நேற்று மீண்டும் கூடிய போது, அனந்தி, வேலன் சுவாமிகள் போன்றவர்கள் தென்னிலங்கை போராட்டம் உள்ளிட்டவற்றில் நாம் அக்கறை செலுத்த வேண்டியதில்லையென்றனர்.  அது சிறிலங்காவின் பிரச்சனை. தமிழர்களின் பிரச்சனை வேறு என்ற சாரப்பட கருத்து தெரிவித்தனர்.

வேலன் சுவாமி, இடைக்கால நிர்வாகமொன்று அமைக்கப்பட வேண்டுமென்றார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கம் பற்றி பேசப்பட்ட போது, பல்வேறு விதமான கருத்துக்கள் பகிரப்பட்டன. நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை நீக்கத்திற்கும் சிலர் எதிர்ப்பை தெரிவித்தனர்.

தென்னிலங்கை போராட்டங்களில் தமிழ் தரப்புக்கள் பங்கேற்கக்கூடாதென  பெருமளவானவர்கள் கருத்து தெரிவித்தனர்.

எந்த தீர்மானமும் எட்டப்படாத இந்த கூட்டம் பற்றிய தொகுப்பை தயாரிக்கும் பொறுப்பு சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் வழங்கப்பட்டது. அந்த பணி முடிந்ததும் கூட்டம் பற்றிய பத்திரிகை அறிக்கை வெளியிடப்படும்.

spot_imgspot_img

More like this
Related

வட்டுக்கோட்டை 50: தமிழர் தேச உரிமை கோரிக்கை மீண்டும் முழக்கம்

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழர்...

கனடாவில் ATM கொள்ளை – தமிழர் கைது

கனடாவின்  பீல் பிராந்தியத்திலுள்ள – பிராம்ப்டனில் நடந்த மூன்று கொள்ளைச் சம்பவங்கள்...

ஹோர்முஸில் அமெரிக்காவின் சுங்கக்கட்டணம் மட்டுமே இருக்கலாம்!

ஈரானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தையாளர்கள் முடிக்கத் தவறினால், முக்கியத்துவம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்