யாழில் கொன்று புதைக்கப்பட்ட பெண்: திடுக்கிடும் தகவல்கள்!

Date:

ஏப்ரல் 7ஆம் திகதி மாலை.

யாழ்ப்பாண பொலிசாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலொன்றின் அடிப்படையில், அரியாலை, மணியந்தோட்டத்திலுள்ள வீடொன்றின் பின் வளவில் நடத்திய சோதனையில், மோட்டார் சைக்கிள் ஒன்று புதைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

அந்த மோட்டார் சைக்கிள், காணாமல் போன பெண்ணொருவருடையது.

அந்தப் பெண் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காணாமல் போயிருந்தார். அவரது மோட்டார் சைக்கிள் புதைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டதால், அந்த பெண்ணின் சடலமும் அந்த வளவில் புதைக்கப்பட்டிருக்கலாமென பொலிசார் நம்பினார்கள்.

மறுநாள். ஏப்ரல் 8ஆம் திகதி. மணியந்தோட்டத்தின், உதயபுரம் பகுதியிலுள்ள அந்த வீட்டு வளாகத்தில், காணாமல் போன பெண்ணின் சடலமும், மோட்டார் சைக்கிளும் புதைக்கப்பட்டிருக்கலாமென்ற பொலிசாரின் தகவலின் அடிப்படையில், அங்கு நிலத்தை அகழ்ந்து சோதனையிட நீதிமன்றம் அனுமதியளித்தது.

8ஆம் திகதி மாலை. அந்த வீட்டின் பின்புறம் நிலத்தை அகழ்ந்து சோதனையிட்டதில் பெண்ணின் சடலமும், மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டன.

கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர் அதே இடத்தை சேர்ந்த பிரதீபன் ஜெசிந்தா என்ற 42 வயதுடைய பெண்.

ஜெசிந்தா ஏன் கொல்லப்பட்டார்? அவருக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த மர்மம் எப்படி துலங்கியது?

சம்பவங்களை முழுமையாக அறிய வீடியோவை பாருங்கள்.

spot_imgspot_img

More like this
Related

வட்டுக்கோட்டை 50: தமிழர் தேச உரிமை கோரிக்கை மீண்டும் முழக்கம்

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழர்...

கனடாவில் ATM கொள்ளை – தமிழர் கைது

கனடாவின்  பீல் பிராந்தியத்திலுள்ள – பிராம்ப்டனில் நடந்த மூன்று கொள்ளைச் சம்பவங்கள்...

ஹோர்முஸில் அமெரிக்காவின் சுங்கக்கட்டணம் மட்டுமே இருக்கலாம்!

ஈரானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தையாளர்கள் முடிக்கத் தவறினால், முக்கியத்துவம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்