ஈஸ்டர் தாக்குதல் உண்மைகளை வெளிக்கொணர அதிகாரம் தேவை

Date:

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வெளிப்படுத்தப்படாத உண்மைகளை வெளிக்கொணர அரச அதிகாரம் தேவை என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ஈஸ்டர் தாக்குதலின் மூளையாக செயல்பட்ட சஹ்ரான் ஹசீம் பயன்படுத்திய வாகனத்தையே முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் பயன்படுத்தியதாக அண்மையில் தெரியவந்துள்ளது.

இரண்டு சாத்தியக்கூறுகள் நிலவுவதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க கூறினார்.

சஹ்ரான் ஹாஷிமின் வாகனத்தை பொது பாதுகாப்பு அமைச்சு பெற்றுக் கொண்டது அல்லது அமைச்சு சஹ்ரானுக்கு வாகனத்தை வழங்கியது.

கொலைகாரன், பலரது மரணத்திற்கு காரணமான சஹ்ரான், அரசால் பாதுகாக்கப்பட்டு, அரச சம்பளத்தையும் பெற்றுள்ளார் என்றார்.

எனவே, இந்த அண்மைய தகவல்கள் தொடர்பில் நியாயமான சந்தேகங்கள் எழுந்துள்ளதாக ஜே.வி.பி தலைவர் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் – மனித–யானை மோதலைத் தடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில்,...

அரசுக்கு எதிராக 12ஆம் திகதி அடையாள உண்ணாவிரதம்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள்...

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்