பொகவந்தலாவ நகரில் போராட்டம்!

Date:

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, எரிபொருள் விலையேற்றம், எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன்றவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொகவந்தலாவ பிரதேசத்தில் உள்ள பல தோட்டங்களில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் இன்று (21) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பொகவந்தலாவ நகரில் இன்று ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதன்போது, வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தற்போதைய அரசாங்கத்தில் உள்ள அனைவரும் பதவி விலகி நாட்டை சுபீட்சமாக மாற்றக்கூடியவர்களுக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

பிரதான வீதிகளை மறித்து போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

-பொகவந்தலாவ செய்தியாளர் ரமேஷ்-

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் எம்.பி வி.தர்மலிங்கம் நினைவு நிகழ்வு!

யாழ்ப்பாணம் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்...

தந்தை செல்வாவின் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்க!

தெல்லிப்பளையில் உள்ள தந்தை செல்வாவின் தூபி மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய...

எதிர்ப்பு குரல்களை முடக்குவதிலேயே என்.பி.பி மும்முரம்!

தேசிய மக்கள் சக்தியினதும் JVPயினதும் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாதவர்களை முடக்குவதிலும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்