நாளை முதல் பகலில் மின்வெட்டு!

Date:

நாளை (16) முதல் நாடு முழுவதும் திட்டமிடப்பட்ட மின்வெட்டு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

ஏப்ரல் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக மின்வெட்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், திட்டமிடப்பட்ட மின்வெட்டு நாளை முதல் மீண்டும் அமுலாகும்.. 02 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு மின்சாவெட்டு அமுல்ப்படுத்தப்படும்.

காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும். இரவில் மின்வெட்டு இருக்காது.

இதேவேளை, கான்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருள் வழங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அனுமதியின்றி கான்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருளை வழங்குவதைத் தவிர்க்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

முன்னதாக, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கான்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருளை வழங்குவதில்லை என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்தது.

இருப்பினும், இப்போது கட்டுப்பாட்டை மேலும் நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...

மன்னிப்பு வழங்குமாறு அநுரவிடம் கெஞ்சும் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 இல் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி...

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்