யாழில் இலஞ்சம் வாங்கிய போது மடக்கிப் பிடிக்கப்பட்ட தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்!

Date:

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் வாங்கும் போது, இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவினரால் கையும் மெய்யுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று இந்த பரபரப்பு சம்பவம் நடந்தது.

விவாகரத்து வழக்குடைய ஒருவரிடம் 30,000 ரூபா இலஞ்சம் கோரியுள்ளார். இது குறித்து அந்த நபர் கொழும்பு இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவினரிடம் முறையிட்டுள்ளார்.

இதன்படி, இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவினரால் வழங்கப்பட்ட பணத்தை இன்று மல்லாகம் நீதிமன்றத்திற்கு அருகில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரிடம் வழங்கியுள்ளார்.

இதன்போது, மறைந்திருந்த இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவினரால் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டார்.

மானிப்பாய் பகுதியில் வசித்து வரும் நபரே கைதாகினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இந்துக்கள் அல்லாதவர்கள் இந்த கோயிலுக்குள் நுழைவதென்றால் பசு சாணம், சிறுநீர் உட்கொள்ள வேண்டும்!

உத்​த​ராகண்​டில் சார் தாம் யாத்​திரை தொடங்​கி​யுள்ள நிலை​யில், இந்து அல்​லாதவர்​கள் கோயிலுக்​குள்...

ஆசிய கடற்பரப்பில் 3 ஈரானிய கப்பல்களை இடைமறித்துள்ள அமெரிக்க கடற்படை

ஆசியக் கடற்பரப்பில் ஈரான் கொடியுடன் சென்ற குறைந்தது மூன்று எண்ணெய்க் கப்பல்களை...

காணாமல் போன 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் குறித்து நிதி அமைச்சகமும், மத்திய வங்கியும் ஏன் மௌனம் காக்கின்றன?: ஹர்ஷ கேள்வி

பொது நிதிக்கு அரசியலமைப்பு ரீதியாகப் பாராளுமன்றமே பொறுப்பு என்று கூறி, பொது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்