அவுஸ்திரேலியாவில் பயனாளிகளை ஏமாற்றிய குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் Meta

Date:

மோசடியான விளம்பரங்களைக் குறிப்பிட்ட பயனீட்டாளர்களை இலக்காகக் கொண்டு அனுமதித்ததாகக் கூறி, அவுஸ்திரேலிய அரசாங்கம் பேஸ்புக்கின் மூல நிறுவனமான Meta மீது சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

உலகின் மிகப்பெரிய சமூக ஊடகங்களில் ஒன்றான பேஸ்புக் தெரிந்தே பொய்யான, தவறாக வழிநடத்தக்கூடிய, ஏமாற்றும் வகையான விளம்பரங்களை வெளியிட்டதாக அவுஸ்திரேலியா குற்றம் சுமத்தியது.

அந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அமெரிக்க நிறுவனமான Meta நிதித் தடைகளையும் ஏனைய அபராதங்களையும் எதிர்நோக்கலாம்.

பேஸ்புக்கின் Algorithm எனப்படும் கணினிவழித் தீர்வுக்கான நிபந்தனை நிரல், குறிப்பிட்ட மோசடிக்கு எளிதில் ஆளாகும் பயனீட்டாளர்களை இலக்காகக் கொண்டு விளம்பரங்களைக் காட்டியதாகக் கூறப்பட்டது.

அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் அவுஸ்திரேலியப் பிரபலங்கள் குறிப்பிட்ட சேவைகளையும் பொருள்களையும் ஆதரிப்பதுபோன்ற விளம்பரங்களும் காட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை...

பஸ் லலித் விசாரணையில் கக்கியவை!

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்காரவிடம் நடத்தப்பட்ட...

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்