வவுனியாவில் இரண்டாவது நாளாக வாகனங்கள் வரிசை

Date:

வவுனியா மாவட்டத்திலுள்ள எரிபொருள் விற்பனை நிலையங்களில் நேற்று (01) இரண்டாவது நாளாகவும் காலை முதல் டீசல் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருவதுடன், நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன.

எரிபொருள் நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு காரணமாக எண்ணை நிரப்பு நிலையங்களில் நீண்ட வாகன வரிசைகள் காணப்பட்டன. ஒவ்வொரு வாகன சாரதிகளும் எண்ணை நிரப்புவதற்காக வாகனங்களை வீதியோரத்தில் நிறுத்தி வைத்துள்ளமையினால் சில எண்ணை நிரப்பு நிலையங்கள் முன்னால் வாகன நெரிசலும் ஏற்பட்டிருந்தன.

அத்துடன், வாகன சாரதிகள் மற்றும் பொது போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்து சாரதிகள் டீசல் எண்ணெய்யினை தேடி ஒவ்வொரு எண்ணை நிரப்பு நிலையங்களை நோக்கிச் சென்று வருவதாகவும், இதனால் தாங்கள் பெரும் சிரமங்களுக்கு உட்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தற்குறி போல நடந்த அர்ச்சுனா கைது!

பாராளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பொலிஸாரால்...

அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச்சூடு: பத்திரமாக வெளியேறிய ட்ரம்ப்

வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களின் விருந்து விழாவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்நிலையில், இதில்...

மட்டக்களப்பில் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள், ரூ.17 இலட்சம் பணத்துடன் மாயமான அடகு நிறுவன முகாமையாளர்!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை அடகு பிடிக்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்