எரிபொருளை பற்றி பேச தயாரான போது பதறிய பொலிசார்!

Date:

வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் ஊடக சந்திப்புக்கு பொலிசார் இடையூறை ஏற்படுத்தியுள்ளனர்.

தனியார் பேரூந்துகளுக்கு எரிபொருள் பிரச்சனை தொடர்பில் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க தலைவரால் வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் தனியார் பேரூந்து பதிவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் நேற்று (01) ஊடக சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அங்கு ஊடகவியலாளர்கள் சென்று ஊடக சந்திப்பை பதிவு செய்ய தயாராகிய போது பொலிசார் அங்கு நடத்த முடியாது என தெரிவித்தனர். பின்னர் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க தலைவரை அழைத்து விபரங்களை பெற்றதுடன், ஊடகவியலாளர்கள் மற்றும் குறித்த ஊடகவியலாளர்கள் பணியாற்றும் ஊடக நிறுவனங்களின் விபரங்களையும் பொலிசார் கோரினர்.

இதனபோது, நாம் ஏன் எமது விபரத்தை பதிவு செய்ய வேண்டும் என ஊடகவியலாளர்கள் கோரியதுடன் விபரத்தை கொடுக்க மறுத்தனர். இதன்பின் அமைதியாக நின்ற பொலிசார் ஊடக சந்திப்பு நடைபெற்ற போது அதனை முழுமையாக கண்காணித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நயன்தாராவின் இந்திப் பட ரிலீஸ் அறிவிப்பு

கார்த்தி, நாகார்ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்களை இயக்கியவர்...

பிரதமர் மோடி கொடுத்த 10 ரூபாயை ரூ.1.11 லட்சத்துக்கு வாங்க பலர் ஆர்வம்

மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி கடந்த வாரம் ஜார்கிராமுக்கு...

கசிப்பு தேடிய பொலிஸ்காரர் கொலை: குற்றவாளிக்கு மரணதண்டனை!

சட்டவிரோத மதுபான ஆலை மீதான சோதனையின் போது ஒரு பொலிஸ் உத்தியோகத்தரை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்