களுத்துறை வடக்கு பகுதியில் கொழும்பு கோட்டையிலிருந்து காலி நோக்கி பயணித்த இரவு அஞ்சல் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான ராஜேந்திரம் சனாதனன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ரயிலில் மோதியவரின் தலை துண்டிக்கப்பட்டது.
இதேவேளை, களுத்துறை கல்லூரிக்கு முன்பாக சடலமொன்று கண்டெடுக்கப்பட்டதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1