ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று பொலிஸ் உத்தியோகத்தர்களை அச்சுறுத்தி இடையூறு செய்தமை மற்றும் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்றை பாராளுமன்ற வளாகத்திற்குள் கொண்டு வந்தமை தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
விசாரணையின் போது தெரியவரும் தகவல்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், அந்த முடிவை நாடாளுமன்றத்தில் அறிவிப்பதாகவும் அவர் கூறினார்.
மின்சார துண்டிப்பிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினர் நேற்று டோர்ச் லைட்டை எரிய விட்டமை குறிப்பிடத்தக்கது.



