உக்ரைனில் அதிகரித்து வரும் அபாய நிலைமையையடுத்து, அங்கு தங்கியுள்ள இலங்கை பிரஜைகளை பாதுகாப்பாக ஒருங்கிணைக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, உக்ரைன் விவகாரங்களையும் கையாளும் துருக்கியிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளிவிவகார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
உக்ரேனில் உள்ள இலங்கைப் பிரஜைகள் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நிறுவப்பட்டுள்ள 24×7 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
மொபைல்: +90 534 456 94 98
லாண்ட் லைன்: +90 312 427 10 32
மின்னஞ்சல்: slemb.ankara@mfa.gov.lk



