வட்டுக்கோட்டை விபத்தில் இளைஞன் பலி!

Date:

யாழ் வட்டுக்கோட்டை, அராலி, செட்டியர் மடம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை (12) இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு, உடையார் கட்டு பகுதியை சொந்த இடமாகவும், வட்டுக்கோட்டை பகுதியியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி நிரோஜன் (22) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவருடன் பயணித்த வட்டுக்கோட்டை மேற்கு பகுதியை சேர்ந்த அல்பினோ வசந்த் (20) என்ற இளைஞர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

கட்டுப்படுத்த முடியாத அதி வேகம் காரணமாகவே இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

நேற்று (20) நள்ளிரவு முதல் பால் தேநீரின் விலையை 5 ரூபாவினால்...

நீதிமன்றத்தில் அம்பலமாகும் உயிர்த்த ஞாயிறு சதித்திட்டம்: கோட்டாவின் கூலிப்படையாக செயற்பட்ட பிள்ளையான் குழு!

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்த நீதிமன்ற...

மயிலத்தமடு மேய்ச்சல் தரைக்கு காணியை விடுவிக்க பணிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்காக,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்