காதல் திருமணம் செய்த ஜோடி எஸ்.பி ஆபிசில் தஞ்சம்: பெண் குடும்பத்தினர் அரசியல் பின்புலத்தால் மரண பயம்!

Date:

காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோடி, பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர், சருகுவளையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வசந்தராஜா. இதே கிராமத்தை சேர்ந்த பெண்மணி கமலி மேகம். இவர்கள் இருவரும் கடந்த 2 வருடமாக உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், இருவரின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவரவே, கமலி மேகத்தின் வீட்டில் வரன் பார்க்க தொடங்கியுள்ளனர். மேலும் திருமண ஏற்பாடுகளும் நடந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த கமலி மேகம், நான் வசந்தராஜாவை தான் திருமணம் செய்வேன் என்று கூறி, பெற்றோரை எதிர்த்து கடந்த 8 ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். காதல் ஜோடி பழனி முருகன் கோவிலில் வைத்து மாலை மாற்றி திருமணமும் செய்துள்ளனர்.

இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காத கமலி மேகத்தின் குடும்பத்தினர் மிரட்டல் விடுப்பதால், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருவரும் தஞ்சம் புகுந்துள்ளனர்.

மேலும், கமலி மேகத்தின் பெற்றோர் பணபலம் மற்றும் அரசியல் பலத்துடன் இருப்பதால், எங்களை கொலை செய்து விடுவார்கள் என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

நேற்று (20) நள்ளிரவு முதல் பால் தேநீரின் விலையை 5 ரூபாவினால்...

நீதிமன்றத்தில் அம்பலமாகும் உயிர்த்த ஞாயிறு சதித்திட்டம்: கோட்டாவின் கூலிப்படையாக செயற்பட்ட பிள்ளையான் குழு!

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்த நீதிமன்ற...

மயிலத்தமடு மேய்ச்சல் தரைக்கு காணியை விடுவிக்க பணிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்காக,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்