70 வயதிற்கு மேற்பட்ட கைதிகளை விடுவிக்க யோசனை!

Date:

70 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை விடுதலை செய்வதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார முன்மொழிந்துள்ளார்.

நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பண்டார, 10 வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனையை பூர்த்தி செய்தல் போன்ற நிபந்தனைகளை கருத்தில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.

கைதிகளின் நலன் மற்றும் அவர்களின் தேவைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கூறிய பாராளுமன்ற உறுப்பினர், அரசாங்கம் எவ்வாறாயினும் அத்தகைய நடவடிக்கைகளுக்கு அப்பால் செல்ல வேண்டும் என்றும் கூறினார்.

கைதி செய்த குற்றச் செயலைப் பொருட்படுத்தாமல் அத்தகைய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார்.

அமைப்பை மேம்படுத்தும் முடிவை எடுக்கும்போது, ​​அவர்களது குடும்பங்கள் மற்றும் குழந்தைகளின் அவலநிலையையும் கருத்தில் கொள்ளுமாறு அதிகாரிகளை பாராளுமன்ற உறுப்பினர் பண்டார வலியுறுத்தினார்.

இதேவேளை, விவாதத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் விஜேசேகர, ஒரு கைதிக்கு உணவுக்காக அரசாங்கம் நாளாந்தம் 300 ரூபாவை செலவிடுவதாக தெரிவித்தார்.

ஊனமுற்ற கைதிகள் உட்பட 80-90 வயதுக்கு இடைப்பட்ட முதியோர் கைதிகள் பலர் இருப்பதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விஜேசேகர அவர்கள் இன்று அரசாங்கத்திற்கு சுமையாக மாறியுள்ளதாகத் தெரிவித்தார்.

14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு ரேபிட் ஆன்டிஜென் சோதனைகளுக்கு ரூ.2,000 மற்றும் PCR பரிசோதனைக்கு ரூ.6,000 செலவிடப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், எச்.ஐ.வி பரிசோதனைகள், எக்ஸ்ரே மற்றும் மருந்துகளுக்கு பெரும் தொகை செலவிடப்படுவதாகவும் அவர் கூறினார்.

எனவே, 15-20 வருட சிறைத்தண்டனையை பூர்த்தி செய்த கைதிகளை விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும்.  அவர்களில் பெரும்பாலானோர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்: தமிழக முதல்வர் விஜய்

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்! கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச்...

மத்தியகுழு கூட்டத்தில் வெடித்த சுமந்திரன்- சிறிதரன் மோதல்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் வழக்கம் போல பெரும்...

கள்ளக்காதலனுடன் இணைந்து தாயைக் கொன்ற மகள்

திரப்பனை நகர எல்லைக்குட்பட்ட அத்துங்கம சந்திப்புக்கு அருகே உள்ள ஒரு வீட்டில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்