அண்மையில் நடைபெற்ற இலங்கை சுதந்திர தின அணிவகுப்பின் போது போர் வீரர்களை ஏற்றிச் செல்லும் இராணுவக் காட்சிக் காரில் விடுதலைப் புலிகளின் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமைதொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது.
சுதந்திர தினத்திலன்று இலங்கை இராணுவ அணிவகுப்பில் இராணுவத்தின் சாகசப்படங்கள் அடங்கிய வாகனப்பவனியும் இடம்பெற்றது.
இதில், விடுதலைப் புலிகளின் போராளிகளின் புகைப்படம் ஒன்றும், இராணுவத்தினரின் புகைப்படமென தவறாக இடம்பெற்றிருந்தது.
இந்த விடயம் சர்ச்சையானதைடுத்து, இந்த தவறு எவ்வாறு நேர்ந்தது என்பது ஆராயப்பட்டு வருகிறது.



