இ.போ.சவின் வடபிராந்திய உயரதிகாரிகள் 3 பேர் பணி இடைநிறுத்தம்!

Date:

இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய அதிகாரிகள் 3 பேர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய பிரதான முகாமையாளர் ஒருவரும், பாதுகாப்பு தொடர்பான உயரதிகாரியொருவரும் மற்றும் கிளிநொச்சி சாலையிலுள்ள ஒரு அதிகாரியும் இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிய வருகிறது.

அவர்களை இடைநிறுத்தும் கடிதம், இ.போ.ச தலைமையலுவலகத்திலிருந்து, வடபிராந்திய தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும், உயரதிகாரிகள் விடுமுறை பெற்று சென்றுள்ளதால், அவர்களிற்கான இடைநிறுத்தல் கடிதம் நேற்று நேரில் கையளிக்கப்படவில்லை. தபால் மூலமாக அவர்களிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

2019ஆம் ஆண்டு முறையற்ற தினவரவு பதிவேட்டின் அடிப்படையின் சம்பளம்,மேலதிக கொடுப்பனவை ஒருவர் பெற்றதாகவும், அதற்கு துணை போனதாக இருவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்படுவதுடன், குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கன்னியா பகுதியில் விகாரை அமைக்க திட்டம்; தமிழ் மக்களின் உணர்வுகளை அரசாங்கம் மதிக்க வேண்டு

திருகோணமலை மாவட்டத்தில் வரலாற்று, மத மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த கன்னியா...

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்