வல்வெட்டித்துறை நகரசபையின் உப தலைவராக சதீஸ்வரன் தெரிவாகியுள்ளார்.
உபதலைவராக இருந்த கேசவன் பதவி விலகியதையடுத்து, இன்று உப தலைவர் தெரிவு இடம்பெற்றது.
17 பேர் கொண்ட வல்வெட்டித்துறை நகரசபையில் இன்று 9 உறுப்பினர்கள் மாத்திரமே கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சதீஸ்வரனை ஆதரித்தனர். இதனால் அவர் போட்டியின்றி தெரிவானார்.




