நுவரெலியா -பட்டிபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டேப்பன்டைல் வனப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று, (13) மதியம் 12.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு குணரத்தின மாவத்த 50 ஏக்கர் கிராமம் பகுதியை சேர்ந்த சத்துருவான் ஹப்புகாமி (45) என்ற வர்த்தகரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பட்டிப்பொல நகரில் இருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் உள்ள உலக முடிவு பகுதிக்கு செல்லும் பகுதியில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இவரது மனைவி 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். அதன் பின்னர் அவர் வேறொரு திருமணம் செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் மரண விசாரணையின் பின்னர் பிரேத பரிசோசணைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும்.



