அங்கொட லொக்கா பயன்படுத்திய துப்பாக்கி மீட்பு!

Date:

மதுரை – சிவகங்கை மாவட்ட எல்லைக்கு அருகே உள்ள தனிமையான இடத்தில் இருந்து இலங்கை பாதாள உலக தாதா அங்கொட லொக்கா பயன்படுத்திய நாட்டு துப்பாக்கியை சிபிசிஐடி அதிகாரிகள் சமீபத்தில் மீட்டுள்ளனர்.

இந்தியாவில் தலைமறைவாக இருந்த அங்கொட லொக்கா, ஜூலை 2020 இல் கோவையில் மாரடைப்பால் இறந்தார்.

”மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் டி.சிவகாமை சுந்தரி என்பவரால் துப்பாக்கியும், ஐந்து தோட்டாக்களும் அந்த இடத்திலேயே புதைக்கப்பட்டதாக நாங்கள் அறிந்தோம். அவரது தந்தை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்,” என்று சிபிசிஐடி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஓகஸ்ட் 2020 இல், சிவகாமி சுந்தரி, அவரது நண்பர் தியானேஸ்வரன் மற்றும் லொக்காவின் காதலி அமானி தன்ஜி ஆகியோர் லொக்காவின் அடையாளத்தை மறைத்து, மதுரையில் அவரது சடலத்தை எரித்ததற்காக கோவை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில், CB-CID அதிகாரி ஒருவர், விடுதலைப் புலிகளின் முன்னாள் செயற்பாட்டாளரான சத்குணம் என்கிற சபேசன், மற்றும் லொக்கா ஆகியோருக்கு இடையே தொடர்பு இருப்பதாக கூறினார்.

பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தலில் ஈடுபட்டதாக சபேசனை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கடந்த அக்டோபர் மாதம் கைது செய்தது.

பின்னர், கோவை சிபிசிஐடி அதிகாரிகள் அவரையும், இலங்கையில் பாதாள உலக தாதாவான சின்ன சுரேஷ், சென்னையைச் சேர்ந்த சவுந்தர்ராஜன் ஆகியோரையும் லொக்கா மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர் லடியா என்ற சானுக தனநாயக்காவுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக காவலில் எடுத்தனர்.

கோவை சிபிசிஐடி துணைக் கண்காணிப்பாளர் பி.சிவகுமார் மற்றும் அவரது குழுவினர், இலங்கையில் உள்ள அதுருகிரியாவைச் சேர்ந்த லடியா மற்றும் பெங்களூரைச் சேர்ந்த டி.கோபாலகிருஷ்ணன் (46) ஆகியோரை கடந்த நவம்பர் மாதம் கைது செய்தனர். கோபாலகிருஷ்ணன் ஹவாலா பரிவர்த்தனையில் லொக்கா மற்றும் லடியாவுக்கு உதவி செய்தார்.

சமீபத்தில், லடியா மற்றும் கோபாலகிருஷ்ணனை சிபிசிஐடி 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தது.

விசாரணையில், சபேசன் மற்றும் சின்ன சுரேஷ் ஆகியோர் போட்டி கும்பல் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான தொடர் குற்றங்களில் ஈடுபட்டு இலங்கையை விட்டு வெளியேறியதாக இருவரும் தெரிவித்தனர். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் லொக்காவும் லடியாவும் அதன்பிறகு இந்தியாவுக்குச் சென்றனர். இவர்கள் நால்வரும் இந்தியாவில் பரஸ்பரம் தொடர்பில் இருந்ததாகவும், பல்வேறு நாடுகளில் இருந்து இலங்கைக்கு ஹெராயின் போதைப்பொருளை கடத்தி வந்ததாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

“ஜூலை 2020 இல் லொக்கா இறந்த பிறகு, லடியா போதைப்பொருள் கடத்தல் தொழிலை எடுத்துக் கொண்டார்” என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்