கண்டி நகரில் நீண்டகாலமாக இயங்கி வந்த சொகுசு விபச்சார விடுதியின் முகாமையாளருடன் 28 மற்றும் 27 வயதுடைய இரண்டு யுவதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி பிரதேச ஊழல் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசு வீட்டில் நடத்தப்பட்ட இந்த விபச்சார விடுதி, மசாஜ் நிலையமாக இயங்கி வந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
எந்தவொரு சட்டப்பூர்வ அனுமதிப்பத்திரமும் இன்றி நடத்தப்படும் இந்த சொகுசு விபச்சார விடுதியின் பெண்கள் அதிக விலைக்கு கொள்வனவு செய்பவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



