29.5 C
Jaffna
April 19, 2024
இலங்கை

முல்லைத்தீவில் கொடூர விபத்து: 2 இளைஞர்கள் பலி; ஒருவர் படுகாயம் (PHOTOS)

முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் இன்று (01)மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

டிப்பர் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

டிப்பர் வாகனத்தில் மோதுண்ட மோட்டார் சைக்கிளில் மூன்று இளைஞர்கள் பயணித்துள்ளதுள்ளனர். இவர்களில் இரண்டுபேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன் ஒருவர் ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

விபத்து சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் குழப்ப நிலை தோன்றியுள்ளது. கிராம மக்கள் விபத்து இடம்பெற்ற வீதியில் ஒன்றுகூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர் .

-கே .குமணன்-

What’s your Reaction?
+1
1
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
3

இதையும் படியுங்கள்

அழகால் வலைவீசி உக்ரைன் போருக்கு இழுக்கப்பட்ட இலங்கையர்கள்!

Pagetamil

கோட்டாவின் வாகனம் மொடல் அழகிக்கு கிடைத்தது எப்படி?

Pagetamil

சுற்றுலா பயணிக்கு ரூ.800க்கு உளுந்து வடை விற்றவர் கைது!

Pagetamil

கணவனின் மரண செய்தியை அறிந்ததும் மனைவி தற்கொலை: நடுத்தெருவில் பிள்ளைகள்!

Pagetamil

புங்குடுதீவில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!

Pagetamil

Leave a Comment