வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிராக 4 பேர் போராட்டம்!

Date:

வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு நடவடிக்கைகள் திரைமறைவில் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்து ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் சில உறுப்பினர்கள் எதிர்ப்பினை வெளியீட்டுள்ளனர்.

இதற்கமைய இன்று (28) ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் க‌ல்குடாத் தொகுதி அமைப்பாள‌ர் ச‌ல்மான் வ‌ஹாப் த‌லைமையில் 4 பேர் மட்டக்களப்பு ஓட்ட‌மாவ‌டியில் க‌வ‌ன‌ ஈர்ப்பு ஆர்ப்பாட்ட‌த்தில் ஈடுபட்டனர்.

இதன்போது வடக்கு கிழக்கை இணைப்ப‌த‌ற்கு துணை போகும் முஸ்லிம் காங்கிர‌சின் துரோக‌த்த‌ன‌த்தை கண்டிக்கின்றோம் கிழக்கு தலைமைகளின் அனுமதியற்ற தீர்வுகளை ஏற்க மாட்டோம் வடக்கு கிழக்கினை இணைக்காதே போன்ற வாசகங்களுடன் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

மேலும் வடகிழக்கு இணைவிற்கு எதிராக‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியினால் தேசிய‌ ம‌ட்ட‌த்தில் ஊடக மாநாடுகளும் க‌ண்ட‌ன‌ ஆர்ப்பாட்ட‌ங்க‌ள் ந‌ட‌த்துப்ப‌ட்டு வ‌ருவதாக கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

-பா.டிலான்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

தவெக சட்டமன்றக் குழு தலைவராக விஜய் தேர்வு

தவெக சட்டமன்றக் குழு தலைவராக அக்கட்சியின் தலைவர் விஜய் ஒருமனதாக தேர்வு...

“நம்மைவிட 17.43 லட்சம் வாக்குகளை மட்டுமே தவெக கூடுதலாக பெற்றுள்ளது” – மு.க.ஸ்டாலின்

‘கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம்...

மூளைக்கும் வாய்க்கும் தொடர்பில்லாமல் பேசிய அர்ச்சுனா!

கச்சைதீவை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தையே தமிழகத்திற்கு கொடுங்கள் என நாடாளுமன்றத்தில் உளறிக்கொட்டியுள்ளார் அர்ச்சுனா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்