தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு பொதுமன்னிப்பு!

Date:

தென்கொரியாவில் ஊழல் குற்றங்களுக்காகத் தற்போது சிறையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி பார்க் கிவென்-ஹுய்க்கு, தற்போதைய ஜனாதிபதி மூன் ஜே இன் பொது மன்னிப்பு வழங்கியிருக்கிறார்.

இந்த மாதம் 31ஆம் திகதி பார்க் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார்.

ஊழல் குற்றங்களுக்காக அவருக்கு 22 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தேசிய ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி மூன் அந்தச் சிறப்புப் பொது மன்னிப்பை வழங்கியதாக அதிகாரிகள் கூறினர்.

தென்கொரியாவில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின் பொறுப்பிலிருந்து இறக்கப்பட்ட முதல் ஜனாதிபதி பார்க் ஆவார்.

பெரிய நிறுவனக் குழுமங்களிடமிருந்து பெருந்தொகை பணத்தை இலஞ்சமாக பெற, உதவியாளர் ஒருவருடன் கூட்டாகச் செயல்பட்டதற்காக பார்கிற்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

தமது குடும்பத்துக்கும், தமக்குச் சொந்தமான பல அமைப்புகளுக்கும் நிறுவனங்களுக்கும் உதவ, அவர் அவ்வாறு செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...

ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் கைவிட்டன: டிரம்ப்

ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்காத நேட்டோ கூட்டணியின் உறுப்பினர்களால் தான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்