தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு பொதுமன்னிப்பு!

Date:

தென்கொரியாவில் ஊழல் குற்றங்களுக்காகத் தற்போது சிறையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி பார்க் கிவென்-ஹுய்க்கு, தற்போதைய ஜனாதிபதி மூன் ஜே இன் பொது மன்னிப்பு வழங்கியிருக்கிறார்.

இந்த மாதம் 31ஆம் திகதி பார்க் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார்.

ஊழல் குற்றங்களுக்காக அவருக்கு 22 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தேசிய ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி மூன் அந்தச் சிறப்புப் பொது மன்னிப்பை வழங்கியதாக அதிகாரிகள் கூறினர்.

தென்கொரியாவில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின் பொறுப்பிலிருந்து இறக்கப்பட்ட முதல் ஜனாதிபதி பார்க் ஆவார்.

பெரிய நிறுவனக் குழுமங்களிடமிருந்து பெருந்தொகை பணத்தை இலஞ்சமாக பெற, உதவியாளர் ஒருவருடன் கூட்டாகச் செயல்பட்டதற்காக பார்கிற்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

தமது குடும்பத்துக்கும், தமக்குச் சொந்தமான பல அமைப்புகளுக்கும் நிறுவனங்களுக்கும் உதவ, அவர் அவ்வாறு செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

சம்மாந்துறை ஸதகா நலன்புரி நிதியத்தின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்

சம்மாந்துறை ஸதகா நலன்புரி நிதியத்தின் இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு புதன்கிழமை சம்மாந்துறை...

எரிபொருள் விலையில் நிவாரணம்? உலக எண்ணெய் விலை சரிவால் அரசின் முக்கிய அறிவிப்பு

உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு: விரைவில் எரிபொருள் விலை நிவாரணம்...

மட்டக்களப்பில் ,இந்த வருடத்தில் டெங்கு நோயால் முதன் முதலாக இளம் தாய் உயிரிழப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காச்சலுடன் அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய வாழைச்சேனையை சேர்ந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்