29.3 C
Jaffna
March 29, 2024
உலகம்

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு பொதுமன்னிப்பு!

தென்கொரியாவில் ஊழல் குற்றங்களுக்காகத் தற்போது சிறையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி பார்க் கிவென்-ஹுய்க்கு, தற்போதைய ஜனாதிபதி மூன் ஜே இன் பொது மன்னிப்பு வழங்கியிருக்கிறார்.

இந்த மாதம் 31ஆம் திகதி பார்க் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார்.

ஊழல் குற்றங்களுக்காக அவருக்கு 22 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தேசிய ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி மூன் அந்தச் சிறப்புப் பொது மன்னிப்பை வழங்கியதாக அதிகாரிகள் கூறினர்.

தென்கொரியாவில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின் பொறுப்பிலிருந்து இறக்கப்பட்ட முதல் ஜனாதிபதி பார்க் ஆவார்.

பெரிய நிறுவனக் குழுமங்களிடமிருந்து பெருந்தொகை பணத்தை இலஞ்சமாக பெற, உதவியாளர் ஒருவருடன் கூட்டாகச் செயல்பட்டதற்காக பார்கிற்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

தமது குடும்பத்துக்கும், தமக்குச் சொந்தமான பல அமைப்புகளுக்கும் நிறுவனங்களுக்கும் உதவ, அவர் அவ்வாறு செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இருட்டு அறை… போதைப்பொருள்… சொர்க்க பிரச்சாரம்: ஐஸ் தலைவரின் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த இளம் பெண்களின் தகவல்கள்!

Pagetamil

Leave a Comment