பிரிட்டனில் முதல்முறையாக ஒரேநாளில் 100,000 இற்கும் அதிக தொற்றாளர்கள்!

Date:

பிரிட்டனில் முதல்முறையாக ஒரே நாளில் 100,000க்கும் அதிகமான COVID-19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

ஒரேநாளில் அங்கு 106,122 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.நாளொன்றில் 140 இறப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த ஏழு நாட்களில் 30% தொற்று அதிகரித்துள்ளது.

அதிவேகமாகப் பரவும் ஓமைக்ரோன் பிறழ்வால் அங்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

தொற்று அதிகரித்து வரும் நிலையிலும், கிறிஸ்மஸுக்கு முன் பிரிட்டனில் மேலும் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த மாட்டேன் என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உறுதியளித்தார், இருப்பினும் டிசம்பர் 25 க்குப் பிறகு கூடுதல் நடவடிக்கைகளை நிராகரிக்க மறுத்துவிட்டார்.

நோய்வாய்ப்பட்ட ஊழியர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியிருப்பதால் பல தொழிற்சாலைகள் ஆள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து இரண்டு நாளுக்குப் பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதியானால் தனிமைப்படுத்திக்கொள்ளும் காலம் 10லிருந்து 7 நாளுக்குக் குறைக்கப்படும் எனப் பிரிட்டிஷ் அரசாங்கம் தெரிவித்தது.

இதுவரை அங்கு 18 பேர் ஓமைக்ரோன் தொற்றால் மரணித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ஏறாவூர் மாரியமன் ஆலயத்தி ஜயங்கேணி வாள்வெட்டு குழு தாக்குதலில் 4 பேர் படுகாயம் தாக்குதல் மேற்கொண்ட ஒரு வரை மடக்கி பிடிபு ஏனைவர் தப்பி ஓட்டம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம்  மாரியம்மன் ஆலயத்தில்  அன்னதானம் வழங்கியவர்கள்...

காத்தான்குடியில் வீடு நிர்மாண பணியின் போது தூண் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்று நிர்மாண பணியின்போது தூண் இடிந்து வீழ்ந்ததில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்