பிரிட்டனில் முதல்முறையாக ஒரேநாளில் 100,000 இற்கும் அதிக தொற்றாளர்கள்!

Date:

பிரிட்டனில் முதல்முறையாக ஒரே நாளில் 100,000க்கும் அதிகமான COVID-19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

ஒரேநாளில் அங்கு 106,122 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.நாளொன்றில் 140 இறப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த ஏழு நாட்களில் 30% தொற்று அதிகரித்துள்ளது.

அதிவேகமாகப் பரவும் ஓமைக்ரோன் பிறழ்வால் அங்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

தொற்று அதிகரித்து வரும் நிலையிலும், கிறிஸ்மஸுக்கு முன் பிரிட்டனில் மேலும் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த மாட்டேன் என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உறுதியளித்தார், இருப்பினும் டிசம்பர் 25 க்குப் பிறகு கூடுதல் நடவடிக்கைகளை நிராகரிக்க மறுத்துவிட்டார்.

நோய்வாய்ப்பட்ட ஊழியர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியிருப்பதால் பல தொழிற்சாலைகள் ஆள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து இரண்டு நாளுக்குப் பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதியானால் தனிமைப்படுத்திக்கொள்ளும் காலம் 10லிருந்து 7 நாளுக்குக் குறைக்கப்படும் எனப் பிரிட்டிஷ் அரசாங்கம் தெரிவித்தது.

இதுவரை அங்கு 18 பேர் ஓமைக்ரோன் தொற்றால் மரணித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: 4 கைதிகள் சந்தேகநபர்களாக அறிவிக்கப்பட்டனர்!

32 பேர் உயிரிழந்த நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக...

யாழில் நிறைபோதையில் அட்டகாசம் செய்த இளைஞன்!

யாழ்ப்பாணம், பணடத்தரிப்பு பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர்...

கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்