திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் குறிஞ்சாங்கேணி பாலத்திற்கு அருகில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று இன்று காலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.
7 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்தனர். இதேநேரம் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது.
இழுவைப்படகு கரையில் மோதி கவிழ்ந்ததில், இந்த அனர்த்தம் நிகழ்ந்தது.
படகில் பயணித்த மேலும் 16 பேர் மீட்கப்பட்டு கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். மூவர் மேலதிக சிகிச்சைக்காக, திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பகுதியில் பழைய பாலத்துக்குப் பதிலாக புதிய பாலம் நிர்மாணிக்கப்படுவதனால் இந்த படகுபாதை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1