25 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

நேற்று 697 தொற்றாளர்கள்!

நேற்று 697 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 556,626 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் அனைவரும் புத்தாண்டு கோவிட்-19 கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது 15,765 பேர் நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று, கோவிட்-19 இலிருந்து குணமடைந்த 381 பேர் மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றினர், இது நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 526,734 ஆக உயர்த்தியது.

தற்போது, 1,937 பேர் தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

இதேவேளை, நேற்றைய தினம் மேலும் 19 கொரோனா வைரஸ் தொடர்பான மரணங்கள் இலங்கையில் உறுதிசெய்யப்பட்டதையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,127 ஆக அதிகரித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மத்தள விமான நிலையத்தால் தொடரும் நட்டம்

east tamil

உள்ளுராட்சி தேர்தல் விதிகளில் தாமதம்

east tamil

நாளொன்றுக்கு 4000 கடவுச்சீட்டுகள்

east tamil

உப்பு விலை 60 ரூபாவால் அதிகரிப்பு

east tamil

கேரள கஞ்சா கடத்தியவர்கள் சிக்கினர்

Pagetamil

Leave a Comment