பிக்குவை தாக்கிய 3 மாணவர்கள் கைது!

Date:

அநுராதபுரத்தில் பிக்கு ஒருவரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், நேற்று (14) அனுராதபுரம் பொலிஸில் சரணடைந்ததன் பின்னர், பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவரின் மகன் உட்பட மூவரை அநுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள எப்பாவல பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய 3 மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் மகன், இராணுவ அதிகாரி ஒருவரின் மகன் உள்ளிட்ட 3 மாணவர்களே கைது செய்யப்பட்டனர்.

கடந்த 12ஆம் திகதி மாலை விகாரை வளாகத்திலிருந்த கட்டிடமொன்றின் பின்புறமிருந்து 3 மாணவர்களும் மது அருந்திக் கொண்டிருந்ததுடன், அது தொடர்பில் வினவிய போது பிக்கு தாக்கப்பட்டதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான பிக்கு, அனுராதபுரத்திலுள்ள தேசிய பாடசாலையொன்றின் ஆங்கில ஆசிரியராவார்.

மூன்று மாணவர்கள் தாக்கியதில் பிக்குவின் மூக்கு உடைந்து இரத்தம் சொட்டியதாக பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்