ஞானசார தேரர் தலைமையில் ஒரேநாடு ஒரே சட்டம் செயலணி: தமிழருக்கு இடமில்லை!

Date:

ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளது.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் 13 பேர் கொண்ட உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். எனினும், இதில் ஒரு தமிழரும் இடம்பெறவில்லை.

ஜனாதிபதியினால் நேற்று (26) இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

நீதி நிர்வாகம், அதைச் செயல்படுத்துதல் மற்றும் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு ஆகியவை அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அனைவருக்கும் நியாயமானதாக இருக்க வேண்டும். எந்த குடிமகனும் சட்டத்தின் பார்வையில் இனத்தின், மதம், சாதி அல்லது வேறு எந்த அடிப்படையிலும் பாகுபாடு காட்டக்கூடாது.

13 உறுப்பினர்களைக் கொண்ட பணிக்குழுவிடம், கருத்தாக்கத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்குள் ஒரே நாடு, ஒரே சட்டம் மற்றும் சட்ட வரைவை தயாரித்து, நீதி அமைச்சினால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் திருத்தங்களை ஆய்வு செய்து பொருத்தமான திருத்தங்கள் உள்ளதா என தீர்மானித்து பொருத்தமானதாக கருதப்படும் முன்மொழிவுகளை சமர்ப்பிக்ககும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த செயலணியின் செயலாளராக ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஜீவந்தி சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மாதத்திற்கு ஒரு முறையாவது ஜனாதிபதியிடம் அறிக்கைகளை சமர்ப்பித்து இறுதி அறிக்கையை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் செயலணிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

செயலணி உறுப்பினர்கள்

1. வண. கலகொடஅத்தே ஞானசார தேரர்
2. பேராசிரியர் தயானந்த பண்டா
3. பேராசிரியர் சாந்திநந்தன விஜேசிங்க
4. பேராசிரியர் சுமேதா சிறிவர்தன
5. என்.ஜி. சுஜீவ பண்டிதரத்ன
6. இரேஷ் செனவிரத்ன
7. சஞ்சய மரம்பே
8. எரந்த நவரத்ன
9. பானி வெவால
10. மௌலவி மொஹமட்
11. முகமது இந்திகாப்
12. கலீல் ரகுமான்
13. அஸீஸ் நிசார்தீன்

Share post:

spot_imgspot_img

More like this
Related

நீதிமன்றத்தில் அம்பலமாகும் உயிர்த்த ஞாயிறு சதித்திட்டம்: கோட்டாவின் கூலிப்படையாக செயற்பட்ட பிள்ளையான் குழு!

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்த நீதிமன்ற...

மயிலத்தமடு மேய்ச்சல் தரைக்கு காணியை விடுவிக்க பணிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்காக,...

இனி நான் மஹிந்த அணியில் இல்லை… அநுரவிற்கே ஆதரவு: அந்தர் பல்டியடித்த சுமணரத்ன தேரர்!

மட்டக்களப்புக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேற்கொண்ட பயணத்தின் போது நடைபெற்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்