Pagetamil
இலங்கை

எந்த நேரத்திலும் உள்ளூராட்சி தேர்தலை நடத்த நாம் தயார்: தேர்தல்கள் ஆணைக்குழு!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எந்த நேரத்திலும் நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா இதனை தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் எதிர்வரும் காலங்களில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடத்தப்படுமானால், சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொற்றுநோய் நிலைமையைக் கருத்தில் கொண்டு திகதிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்றார்.

உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலத்தை ஓராண்டு வரை நீட்டிக்கும் அதிகாரம் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு உண்டு. அதை தடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இல்லை.

2022  பெப்ரவரி 1 முதல் வாக்காளர்கள் பதிவு செய்யப்படுவார்கள் என்பதால், இடைக்காலத்தில் ஒரு துணை வாக்காளர் பதிவேடு தயாரிக்கப்படும். இதன் மூலம் வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமையை இழக்கும் அபாயம் இல்லை என்றார்.

18 வயது நிரம்பிய நபர்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர் அல்லது உதவி தேர்தல் அலுவலரிடம் பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறினார்.

துணை வாக்காளர் பதிவேடு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சான்றளிக்கப்படும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாதகல் கடலில் இளைஞன் பலி

Pagetamil

பியூமியை பணமோசடி தடுப்பு சட்டத்தில் விசாரிக்க உத்தரவு!

Pagetamil

வெலிகம துப்பாக்கிச்சூடு: 6 சந்தேகநபர்களுக்கு பிணை!

Pagetamil

நில மோசடி விவகாரத்தில் மஹிந்த மனைவியும் விசாரணை வளையத்தில்

Pagetamil

சாப்பிட மறுத்த தென்னக்கோன்!

Pagetamil

Leave a Comment