100,000 லிட்டர் நனோ நைட்ரஜன் திரவ உரம் இன்று இந்தியாவிலிருந்து நாட்டுக்கு எடுத்து வரப்படுகிறது.
இந்த திரவ உரம், நெல் மற்றும் இதர பயிர்ச் செய்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
3.1 மில்லியன் லிட்டர் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி செய்ய நேற்று முடிவு எடுக்கப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று காலை நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எட்டப்பட்டது.
அதன்படி, முதல் கட்டத்தின் கீழ், 100,000 லிட்டர் நனோ நைட்ரஜன் திரவ உரம் இன்று இலங்கைக்கு வந்து சேரும்.
நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் இறக்குமதிக்கு சுமார் ரூ .2.9 பில்லியன் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




