வீட்டுக்கு டிமிக்கி விட்டு காதலனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற யுவதியை நடுவீதியில் இறக்கி அறைந்த அண்ணன்: யாழில் சம்பவம்!

Date:

நண்பியுடன் வீட்டிலிருந்து புறப்பட்டு, வழியில் காதலனின் மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்ற யுவதியை, நடுவீதியில் வழிமறித்து, கன்னத்தில் அறைந்தார் சகோதரன்.

இந்த சம்பவம் யாழ்ப்பாணம், கொக்குவிலிற்கு அண்மையாக நேற்று முன்தினம் காலையில் நடந்தது.

காலை 6.30 அளவில் சம்பவம் நடந்தது. உயர்கல்விக்காக இரண்டு யுவதிகள் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில், யாழ் நகர் பக்கமாக சென்று கொண்டிருந்தனர். கொக்குவிலிற்கு அண்மையாக அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்த, அந்த யுவதிகளில் ஒருவரின் காதலனான சக மாணவன் அங்கு வந்து, காதலியை ஏற்றிக் கொண்டு சென்றார்.

அவர்கள் சிறிது தூரம் சென்ற நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்து அவர்களை குறுக்கறுத்து நிறுத்திய இளைஞன் ஒருவர், சடாரென கீழே இறங்கி யுவதியின் கன்னத்தில் சில முறை அறைந்தார்.

அங்கு வந்த ஓரிருவர் தலையிட்ட பின்னர்தான் அது குடும்ப விவகாரம் என்பது தெரிய வந்தது.

குடும்பத்தினரின் கண்டிப்பை மீறி, காதலனுடன் தொடர்பு கொள்வதை அறிந்த சகோதரன், நேரில் வந்து கையும் மெய்யுமாக பிடித்து, சகோதரியை அறைந்தது தெரிய வந்தது.

பின்னர், சகோதரியை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சென்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எண்ணெய் உற்பத்தியை குறைத்த ஈரான்

அமெரிக்காவின் ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகையால் ஏற்பட்ட அதிகரித்து வரும் சேமிப்பு நெருக்கடியைச்...

கிளிநொச்சியில் பிளாஸ்டிக் துப்பாக்கியுடன் மே தினத்திற்கு வந்தவர் கைது!

மே 1 அன்று கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகே நடைபெற்ற மே...

மனவைி விவகாரத்து கோரியதனால்  கோபத்தில்  தென்னைகளை வெட்டி வீழ்த்திய கணவன்

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண்ஒருவர் தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்