வடமாகாண புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்படவுள்ளார்.
மனிதாபிமான அமைப்புக்களின் கூட்டமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும், தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரராகவும் ஜீவன் தியாகராஜா பணியாற்றியிருந்தார்.
இந்நிலையிலேயே, வட மாகாணத்துக்கான புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்படவுள்ளார்.
ஆளுனர் பதவியை ஏற்பதற்காக அவர் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.




