772 கோவிட் -19 தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.
அதன்படி, இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 523,550 ஆக அதிகரிக்கிறது.
நேற்று அடையாளம் காணப்பட்ட 772 தொற்றாளர்களும் புத்தாண்டு கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று 435 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதுதவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 478,761 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் 31,560 பேர் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் 6 ஆம் திகதி 44 கோவிட் -19 இறப்புகள் பதிவாகியிருப்பது உறுதி செய்யப்பட்டது, இது இலங்கையின் வைரஸ் இறப்பு எண்ணிக்கையை 13,229 ஆக உயர்த்தியது.




