பிரிட்டனில் நாளை முதல் எரிபொருள் விநியோகத்தில் இராணுவம்!

Date:

பிரிட்டனில் நாளை முதல் பெட்ரோல், டீசல் நிலையங்களுக்கான விநியோகச் சேவைகளை அந்நாட்டு இராணுவ வீரர்கள் மேற்கொள்வார்கள் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் கனரக வாகன சாரதிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளதால் அங்கு எரிபொருள்களைப் பொதுமக்கள் அவசர அவசரமாக வாங்குகின்றனர்.

இவ்வாரத் தொடக்கத்திலிருந்து அங்கு பெட்ரோல், டீசல் நிலையங்களில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

நிலைமையைத் தற்காலிகமாகச் சமாளிக்க சுமார் 200 ராணுவ வீரர்கள் எரிபொருள் விநியோகச் சேவைகளுக்கு உதவவுள்ளனர். அவர்கள் தற்போது எரிபொருள் விநியோக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். நாளை ஞாயிறு முதல் அவர்கள் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடுவார்கள்.

அதனால் பெட்ரோல், டீசல் நிலையங்கள் மீதான நெருக்கடி சற்றுக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான வட்டாரங்களில் எரிபொருள் பற்றாக்குறைப் பிரச்சினை நிவர்த்தி செய்யப்பட்டுள்ள போதிலும் சில வட்டாரங்களில் நிலைமை மோசமாக உள்ளது என்று கூறப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

ஹரக் கட்டா மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது!

முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் நதுன்...

காசா போர் நிறுத்தத் திட்டத்திற்கான 15 அம்ச செயல்திட்டத்தை அமைதி வாரியம் வெளியிட்டது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் காசா போர்நிறுத்தத் திட்டத்தின் இறுதிக் கட்டங்களைச்...

முன்னாள் பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர் சிறையில் அடைக்கப்பட்டனர்

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று, முன்னரே உளவுத்துறை எச்சரிக்கைகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்