31.3 C
Jaffna
March 28, 2024
முக்கியச் செய்திகள்

மடு தேவாலயத்தின் பிடியிலுள்ள காணியை பொதுமக்களிற்கு பெற்றுக்கொடுப்பேன்: மன்னாரில் இந்து-கிறிஸ்தவ மோதலிற்குள் நுழைந்தார் ஞானசாரர்!

மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோயில் மோட்டை பகுதிக்கு நேற்றைய தினம் புதன்கிழமை(22) மாலை பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோயில் மோட்டை பகுதியில் சுமார் 40 வருடங்களாக கோவில் மோட்டை பகுதி மக்கள் விவசாயம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் குறித்த அரச காணியை தங்களுக்கு வழங்க வேண்டும் என கோவில் மோட்டை விவசாயிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டதோடு, பல போராட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த நிலையில், வட மாகாண ஆளுநர் குறித்த காணியை கோயில் மோட்டை விவசாயிகளுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும் குறித்த காணி தங்களுக்கு வேண்டும் என மடு தேவாலய பரிபாலனசபையினர் கோரி வந்ததுடன் குறித்த காணியை பெற்றுக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந் நிலையில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் கொரோனா இல்லாத இலங்கை உருவாக வேண்டும் என நேற்று புதன் கிழமை (22) மாலை இடம்பெற்ற விசேட பூஜையில் பங்கேற்க பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

மன்னார் வந்த நிலையில் இடைவழியில் வழி மறித்த கோயில் மோட்டை விவசாயிகள் தங்களின் காணி பிரச்சினையை தீர்த்து தருமாறு கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் கோயில் மோட்டை வயல் காணிக்கு பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் நேரடியாக சென்று பார்வையிட்டனர்.

அதை தொடர்ந்து கருத்து தெரிவித்த பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ,,

தேவாலயங்களுக்கு காணிகளை வழங்குவதை விட மக்களின் பசியை தீர்ப்பதே முக்கியம் என தெரிவித்ததுடன், குறித்த காணியை கோயில் மோட்டை விவசாயிகளுக்கு பெற்றுத்தர தன்னால் இயன்ற நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
3
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: மைத்திரி இன்று சிஐடியில் வாக்குமூலம்!

Pagetamil

Leave a Comment