வவுனியாவில் ஆலய பிரதமகுருவால் பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு வீடு கையளிப்பு!

Date:

வவுனியாவில் ஆலய பிரதம குரு ஒருவரால் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு வீடு வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா, ஆசிகுளம் கிராமசேவகர் பகுதிக்குட்பட்ட கற்குளம் பகுதியில் பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றிற்கு வவுனியா புதுக்குளம் சித்திவிநாயகர் மற்றும் மற்றும் கேவில்குளம் மஹாவிஷ்ணு ஆலயப் பிரதம குருக்களாக விளங்குகின்ற சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் அவர்களினால் புதிய வீடு ஒன்று கட்டி அக் குடும்பத்திற்கு கையளிக்கப்பட்டது.

சுவிஸ் நாட்டில் வாழும் பாலேஸ்வரன் அவர்களின் உதவியோடு ஆலய பிரதம குருவால் இவ்வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட உதவி பிரதேச செயலாளர் திருமதி மு.சபர்ஜா, செட்டிகுளம் பிரதேச செயலக இந்துகலாசார உத்தியோகத்தர் சிவகஜன் மற்றும் மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் லதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தற்காலிக வீடு ஒன்றில் மழை மற்றும் வெயிலுடன் தமது பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு பல்வேறு கஸ்ரங்களை எதிர்நோக்கிய பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கே குறித்த வீடு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்