கனடிய பிரதமர் மீது கல்வீசிய குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் இளைஞன்!

Date:

கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது கற்களை வீசியதாக 25 வயது கனடிய இளைஞன் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

ஆயுதமேந்தித் துன்புறுத்தியதாக ஷேன் மார்ஷல் என்ற அந்த இளைஞன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஒண்டாரியோ மாநிலத்தின் லண்டன் நகரில் உள்ள நீதிமன்றத்தில் அவர் நிறுத்தப்பட்டார்.

செப்டம்பர் 6ஆம் திகதி ட்ரூடோ, தேர்தல் பிரசாரப் பேருந்தில் ஏறச் சென்றபோது அவர் மீது கல் வீசப்பட்டது.

எனினும், பிரதமர் ட்ரூடோவுக்குக் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.

தேர்தல் பிரசாரத்தில், பொருள்களை எறிந்து, மற்றவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் கூறியிருந்தார்.

COVID-19 தடுப்பூசிகளைக் கட்டாயமாக்கும் பரிந்துரைகளுக்காக ட்ரூடோவுக்கு எதிராக அவ்வப்போது ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

பிரசாரத்தின்போது திரு. ட்ரூடோவை மிரட்டியதாக செப்டம்பர் 10ஆம் திகதி ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

கனடாவில், வரும் 20ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் எம்.பி வி.தர்மலிங்கம் நினைவு நிகழ்வு!

யாழ்ப்பாணம் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்...

தந்தை செல்வாவின் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்க!

தெல்லிப்பளையில் உள்ள தந்தை செல்வாவின் தூபி மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய...

எதிர்ப்பு குரல்களை முடக்குவதிலேயே என்.பி.பி மும்முரம்!

தேசிய மக்கள் சக்தியினதும் JVPயினதும் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாதவர்களை முடக்குவதிலும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்