ஆசிரியர்கள், பாடசாலைக் கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் கல்வித் துறை நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ள 20 வயதிற்கு மேற்பட்ட யாராவது கோவிட் -19 தடுப்பூசிகளைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டால், இந்த விஷயத்தை நேரடியாக சுகாதார அமைச்சுக்கு அல்லது தொற்றுநோயியல் பிரிவுக்கு தெரிவிக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தலைமையில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பான தீர்மானங்களை எடுக்க நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழு இந்த விடயத்தில் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சந்திப்பின் போது, பாடசாலை போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் நடத்துபவர்கள் உட்பட பாடசாலை நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைத்து நபர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தையும் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவது மற்றும் பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்த தொழில்நுட்பக் குழு அறிக்கை வெள்ளிக்கிழமைக்குள் கோவிட் -19 தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவில் சமர்ப்பிக்கப்படும் என்று நம்புவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.



