அதிக லொக் டவுண் விதித்த நாடு… லொக் டவுண் விதிகளை மீறிய அதிக மக்களை கொண்ட நாடு- இரண்டும் இலங்கையே!

Date:

COVID-19 தொற்றுபரவலின் போது அதிக எண்ணிக்கையிலான முடக்கத்தை விதித்த நாடாகவும், முடக்க விதிமுறைகளை மீறிய அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கொண்ட நாடாகவும் இலங்கை மாறியுள்ளது என உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகள் குறிப்பிடுவதாக சுகாதார தொழில் வல்லுனர்கள் அமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

முடக்கம் முறையான முறையில் இல்லாமல் நீண்ட காலத்திற்கு அமுர்ப்படுத்தப்பட்டதால்,
ஊரடங்கு பற்றிய கருத்து பலவீனப்படுத்தப்பட்டுள்ளது என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

முடக்க காலத்தில் பிசிஆர் மற்றும் பிற சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார். எனினும், சுகாதார அமைச்சும், அதிகாரிகளும் அதை ஏற்றுக்கொள்ளவில்லையென்றார்.

நாட்டை முடக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்கள் இப்போது நாட்டை மீண்டும் திறக்கும்படி கோரி ஆர்ப்பாட்டங்களை நடத்துவார்கள். ஏனெனில் அது சரியாக அமல்படுத்தப்படவில்லை என்றார்.

ஒரு அறிவியல்ரீதியான முடக்கத்தை அமுல்ப்படுத்த வேண்டும். இது உண்மையில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைய உதவும் என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்