வீதியில் உலாவித்திரிந்த மூவருக்கு கொரோனா தொற்று!

Date:

நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு கட்டமாக கொரோனா அலையை கட்டுப்படுத்த அரசினால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள இந்த காலக்கட்டத்தில் எவ்வித தக்க காரணங்களுமின்றி வீதியில் உலாவித்திருந்தோருக்கு எதிராக சுகாதாரத்துறையினரும், பாதுகாப்பு படையினரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சாய்ந்தமருதில் அத்தியவசிய தேவையின்றி வெளியேறிய 20 நபர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனையும் 17 நபர்களுக்கு அண்டிஜென் பரிசோதனையும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.அல் அமீன் றிசாடின் வேண்டுகோளுக்கிணங்க பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர். நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்காமல் வீதியில் உலாவி திரிந்த 37 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 3 நபர்கள் தொற்றாளராகவும் அடையாளம் காணப்பட்டனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.அல் அமீன் றிசாட், நாட்டின் சட்ட திட்டங்களுக்கு மதிப்பளித்து பொதுமக்கள் வீட்டிலேயே இருந்து கொள்ளுமாறும், வீட்டைவிட்டு தேவையில்லாமல் வெளியேறி வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்றை கொண்டு சேர்க்காமல் சுகாதார துறையினருக்கும், இந்த கொரோணா ஆட்கொள்ளி நோயை கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு ஒத்துழைப்பை வழங்குமாறும் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

spot_imgspot_img

More like this
Related

வட்டுக்கோட்டை 50: தமிழர் தேச உரிமை கோரிக்கை மீண்டும் முழக்கம்

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழர்...

கனடாவில் ATM கொள்ளை – தமிழர் கைது

கனடாவின்  பீல் பிராந்தியத்திலுள்ள – பிராம்ப்டனில் நடந்த மூன்று கொள்ளைச் சம்பவங்கள்...

ஹோர்முஸில் அமெரிக்காவின் சுங்கக்கட்டணம் மட்டுமே இருக்கலாம்!

ஈரானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தையாளர்கள் முடிக்கத் தவறினால், முக்கியத்துவம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்