தம்புள்ளை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வளர்ப்பு நாய்களிற்கு வரி அறிமுகப்படுத்தும் பிரேரணை நகரசபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது..
தம்புள்ளை நகராட்சி மன்றப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் வளர்க்கப்படும் வளர்ப்பு நாய்களிற்கு, 2022 ஜனவரி 31 முதல் வரி செலுத்துவதை கட்டாயமாக்க முன்மொழியப்பட்டது.
அடுத்த நகரசபை அமர்வின் போது சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைகள் குறித்த விபரம்,தம்புள்ளை மாநகர சபை உறுப்பினர்களிற்கு, முதல்வர் ஜாலிய ஓபாதவால் இன்று வழங்கப்பட்டது. இதில், நாய் வரியும் இடம்பெற்றுள்ளது.



